×

ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் சடலம் மீட்பு: கொலையா என விசாரணை

 

பெரம்பூர், மே 6: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே, முட்புதாரில் நேற்று அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, அங்கு 75 சதவீதம் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். உயிரிழந்தது ஆணா, பெண்ணா என தெரியவில்லை. ரயிலில் அடிபட்டு யாரேனும் உயிரிழந்த நிலையில் அவ்வப்போது அப்பகுதியில் இளைஞர்கள் குப்பை மற்றும் முட்புதர்களை எரித்து விடுவது வழக்கம். அது போன்று ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு அந்த நபரை எரித்து விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் சடலம் மீட்பு: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Mettupalayam ,Otteri Police Station ,Mutputar ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...